உருக்குலைந்தவாறு கரை ஒதுங்கிய சடலம்
அம்பாறை, கல்முனை , மருதமுனை கடற்கரையில் உருக்குலைந்த சடலம் ஒன்று, இன்று காலை கரை ஒதுங்கியுள்ளது. பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, ஸ்தலத்துக்கு வருகை தந்த மருதமுனை பொலிஸார், சடலத்தை அடையாளம் காணும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இதனையடுத்து சடலம் மீட்கப்பட்ட மருதமுனை கடற்கரை பகுதிக்கு பொலிஸாரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இம்மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed